பனியில் அழுக்கு படியாது

 
மீ.விசுவநாதன்
வாங்கும் கையாய் இல்லாமல் -தினம்
வழங்கும் கையாய் இருந்திடணும் !
தீங்கைத் தட்டிக் கேட்கின்ற – நல்ல
தீரன் கையாய் பலப்படணும் !

கண்ணீர் வழியும் கன்னத்தில் – பாசக்
கைகள் நீண்டு துடைத்திடணும் !
மண்ணைத் திருடும் கொள்ளையரை -உடன்
மடக்கிப் பிடிக்க மனம்வரணும் !

ஓட்டுப் போடும் முன்னாலே – ஓர்கணம்
உயர்ந்த நாட்டை எண்ணிடனும் !
நீட்டும் கையில் கறைகண்டால் -அதை
நியாயத் தீயால் பொசுக்கிடணும்!

மனிதன் எவர்க்கும் விலையுண்டு – மா
மனிதர்க் கதிலே விலக்குண்டு !
பனியில் அழுக்கு படியாது – தூய
பணியில் ஊழல் நுழையாது !

(26.04.2016 22.02pm)

Share

Comments

One response to “பனியில் அழுக்கு படியாது”

  1. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    மாமனிதர்க்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது என்ற புதிய சிந்தனை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மீ விசுவநாதனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *