கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஒரு வெண்பா எழுத நாம் ஏஸியில் கணினி முன் நகம் கடித்து நாள் முழுவதும் வீணாக்குகிறோம்….”பூபாரம் போக்கணும், பார்த்தனுக்கு கீதை படிக்கணும், ராதை காதலுடன், குசேலன் அவலுடன் காத்திருக்கான்….இத்தனை ஆற்ற வேண்டிய கடமைகள் இருந்தும் பசுவை மறவாத ‘’கண்ணன் வாத்ஸல்யம்’’ அபாரம் கேசவ்….
‘’திண்தோள் அளிப்பு திருவடி மேய்ந்திட,
விண்பால்(ற்) கடல்விஷ்ணு வாத்ஸல்யம் -மண்பால்
களம்படிக்க கீதைக் கடமை இருந்தும்,
குளம்படிக்கும் சாய்த்திடுவான் காது’’(இதுதான் செவி சாய்ப்பு)….கிரேசி மோகன்….
குளம்படி -மாட்டின் அடிச்சுவடு….