சமுதாயமும், நீயும், நானும், அவரும்.

மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1

இன்னம்பூரான்

Word cloud concept illustration of diabetes condition
Word cloud concept illustration of diabetes condition

சில வருடங்களுக்கு முன் வல்லமையில் நீரிழிவு நோயை பற்றி எழுதியிருந்தேன். அதிகமான வாசகர்கள் என்றும் சொன்னார்கள். சென்னையின் ஒரு பிரபல டாக்டர் தன் ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் லாமினேட் செய்து அதை வைத்ததாக கடிதம் எழுதினார். செல்வன் மாற்றுக்கருத்து கூறினார். அது டாக்டர்களை பற்றி. ஆனாலும், நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசட்டுத்தனமாக இருக்கிறது. நாட்தோறும், முறைகேடாகத் தான், அபாயமாகத்தான் எதிர்சாரியில்பயணம் செய்கிறார்கள். இது நிற்க.

நான் எந்ததொரு வைத்திய முறைகளையும், மேனாட்டு வைத்தியம், ஆயுர்வேதம், சித்தம், இயற்கை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் வகையறா எதையும் சிபாரிசு செய்யவில்லை. எல்லா முறைகளையிலும் நிவாரணமும் பக்க விளைவுகளும் உண்டு. ஆனால், நிச்சியமாக கொலை செய்யக்க்கூடியவர்கள், போலி டாக்டர்கள், அரைகுறை வைத்தியர்கள், சுற்றி வளைத்து, பொய்யை மெய்யாக்கும் விளம்பரங்கள், இயலாததை செய்து காட்டுவதாக உத்தரவாதங்கள். நீங்கள் உலகமெங்கும் சென்று உண்மையை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீரிழிவு தீராத வியாதி. உணவு கட்டுப்பாடு, தேக பயிற்சி உதவும், ஆரம்பகாலத்தில். பின்னர் மருந்து, மாத்திரை. சிலருக்கு இன்ஸுலின் போட்டுக்கொள்ள வேண்டி வரும். அது தாய்ப்பால் போல. நான் நாட்தோறும் நான்கு முறை இன்ஸுலீன் போட்டுக்கொள்கிறேன். அதை நிறுத்தி விட்டு, அத்தையும், இத்தையும், கையாலகாதத்தையும் செய்வேன் என்ற வீராப்பு மக்களை ஏமாற்றுவது, வஞ்சகம், கொலைக்கு அஞ்சாத நெஞ்சம்.

இந்த கதையை கேளுங்கள்: உசாத்துணையும் கொடுத்து இருக்கிறேன்.

“இன்சுலின் ஊசியை நிறுத்தி சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்…. திருப்பூர் மாணவன் பரிதாப பலி By: Mathi Published: Saturday, May 28, 2016, 15:31 [IST] திருப்பூர்: “

“அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்… அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் ‘அக்குபஞ்சர்’ பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.”

ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தியின் பகுதி:

“…Asked about the matter, Balamurugan told Express that the boy might have been brought to him on the brink of death. “There are numerous patients whom I have cured. This case is one in a thousand. Other medical systems too do not guarantee saving life. They started taking treatment only after accepting my suggestion to stopping the insulin injections,” he said.

Balamurugan, who owned a photo studio till 2010, completed his Diploma in Acupuncture Science through an open university course. He has been running a clinic at Ramnagar in Coimbatore from 2011.
He accepted that there is no statutory body to register or regulate acupuncture healers, unlike systems of medicine like Siddha and Ayurveda.
The family of Subash, who are yet to overcome the grief caused by his death, are yet to take a decision on proceeding with legal action against the therapist.

There are numerous patients whom I have cured. This is one in a thousand. Other medical systems too do not guarantee saving life.”

இந்தியா மண்ணின் மைந்தர்கள் ‘கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது’ என்றால் நம்பலாமா? நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.

உசாத்துணை:
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/diabetic-teen-weaned-away-from-insulin-therapist-dies-at-tirupur-254747.html

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Diabetic-teen-weaned-away-from-insulin-by-therapist-dies-at-Tirupur/2016/05/28/article3454446.ece

சித்திரத்துக்கு நன்றி:https://smartypantsvitamins.com/wp-content/uploads/2013/04/Diabetes-wordcloud.jpg

பழங்கதை:
வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
-ஆசிரியர்
Innamburan Innamburan
Mon, Nov 14, 2011 at 12:33 PM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1
சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள்
விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.
உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.
நீரழியா வேதம்:
பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே
என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.
என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;
சிறார்களை ‘கஷ்குமுக்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.
(தொடரும்)
இன்னம்பூரான்
14 11 2011

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *