கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….
’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
னார்குடி கோபுலு மாடோடு- சாரே!(மலையாள ‘’சாரே’’)
கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….கிரேசி மோகன்….
தொடர்ந்து பன்னாட்களாக நம்மையெல்லாம் தமது அற்புதமான ஓவியக்கலை மூலம் உள்ளம் நெகிழச் செய்யும் ‘கிருஷ்ணப் பிரேமி’ கேஷவ்ஜி அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.