மீ.விசுவநாதன்

 

அந்தத் துறவி அணுகித்தான்
அறத்தி(ன்) அருகே அமர்ந்தேன்நான் !
கந்தல் துணியை அணிந்தாலும்
கவலை மறக்கத் தெரிந்தேன்நான் !
பொந்தாய் இருக்கும் மனத்திற்குள்
புதுமை வழிய இருந்தேன்நான் !
வந்த வழியை மறக்காமல்
வருமெ(ன்) உறவை அணைத்தேன்நான் !

அணுவைப் பிளக்கு(ம்) அவசரத்தில்
அகத்தி(ல்) அழுக்கை அடைத்தேன்நான் !
அணுவில் அணுவாய் இருப்பவனை
அறிய அவரைப் பணிந்தேன்நான் !
கணுவே கரும்பிற் கழகென்று
கையில் சுமந்து திரிந்தோனை
கணுவைப் பிளந்து சுவைகண்டு
கணத்தில் மனத்தை எரியென்றார் !
(26.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *