மீ.விசுவநாதன்

என்னு ளிருக்கும் இசைவெளியில்
இமைக ளடைத்து ரசித்திருபேன்
இன்னு மதிலே கரைந்தேபோய்
இதயம் மறந்து தனித்திருபேன் !
தன்னந் தனியே இருக்கையிலே
தன்னை அறிய முயலுகிறேன்
அன்னப் பறவை அறிவோடு
அகத்தைப் பிரிக்கப் பயிலுகிறேன் !

(07.07.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *