நண்பனொருவன் வேண்டும்
இரா.சந்தோஷ் குமார்
கட்டை விரல் ரணமானால்
சுண்டுவிரல் செய்யும்
ஆறுதல் தழுவலைப் போல்
ஒரு நண்பன் வேண்டும்.
நேச வீதியில்
நேய விழிக்கோர்த்து
நடையளந்து
உளமறிந்து
கரம் கோர்க்க
கர்ணன் போல்
ஒரு நண்பன் வேண்டும்.
பசித்திருக்கும் வேளையில்
சோறூட்டாவிட்டாலும்
கண்ணில் மாசுப் பட்டதைப் போல்
விழிநீர் வழியும்
ஒரு தூய நண்பன் வேண்டும்.
கவிஞனென நான்
தப்பாட்டம் ஆடாவிட்டாலும்
எனை கொண்டாடும்
ஒரு ரசிக நண்பன் வேண்டும் .
என் எழுத்துப் பிழை
கருத்துப் பிழைகளை
விமர்சனம் செய்திட
நக்கீரன் போல்
ஒரு தமிழ்விரும்பி
நண்பனாய்..
தாயாய்…
வேண்டும்.. வேண்டும்…..!