மீ.விசுவநாதன்

எனக்கொரு மந்திரம் வாய்த்துளது – அது

எல்லோர் நலமும் நினைக்கிறது

தனக்கொரு தந்திரம் கொள்ளாத – தினம்

தவிக்கும் உயிரை அணைக்கிறது !

 

இளமையில் ஓடிய கால்களுக்கு – இன்று

இதமாய் தடவிக் கொடுக்கிறது

அளவிலா அன்பினைத் தந்தவர்க்கு – கவலை

அருகில் வராமல் தடுக்கிறது !

 

பலமுறை வாழ்விலே தோற்றவர்க்கு – உள்

பலத்தைக் அளித்துப் பழக்கியது 

குலமுறை எதுவுமே பார்க்காமல் – நல்ல

குணத்தைக் கண்டு மதிக்கிறது !

 

தீவிர வாதமே தீர்வில்லை – “கருணை”

தெய்வ மனத்தைத் திறக்கிறது

தூவிய பூக்களின் வாசம்போல் – அது

பூமி சுகிக்க மணக்கிறது !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *