15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி அரங்கு அமைக்க அழைப்பு
அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது.
கண்காட்சி அரங்கம்
15 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டவுள்ளது. அது மாநாடு நடக்கவுள்ள செப்டம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் நீடிக்கும். கண்காட்சியில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் கணிமை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுப பயன்பெறலாம். தென் தமிழகத்தில் உங்கள் தொழில் வாய்ப்புகளை பெருக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
Fees per stall Rs.5000/- உத்தமம் உறுப்பினர்களுக்கு
Fees per stall Rs.7000/- உத்தமம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு
மேலும் விபரங்களுக்கு
இந்த உலகத்தமிழ் இணைய மாநாடு உங்கள் தயாரிப்புகளை உலகமெங்கும் அறிமுகப்படுத்திட இது ஒரு சரியான வாய்ப்பு. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்!
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வமுரளி
ed@infitt.org
Selva.Murali |
Mobile : +91-99430-94945
Mail ID :- murali@visualmediatech.com