-இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016

 

innamburan

 

இது இன்றைய செய்தி.

அம்மா காண்டீன் என்ற மலிவு விலைச் சாப்பாட்டுக்கடை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று, தமிழ்நாட்டுச் சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடித் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக் கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த  விளக்கமும், அதில் அடக்கம்.

‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்துச் சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, சென்னை மாநகராட்சிதான் வாங்கிய சப்பாத்தி மிஷின்களின் தரக்குறைவைத் தனது டெக்னிகல் கமிட்டி ஆய்வுசெய்து அறிந்து கொண்டபின்னும், ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்த ரூ1.33 கோடியை இழந்துவிட்டதையும், மே 2015இல் கொடுத்த நோட்டீஸுக்குப் பின், யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. சில இடங்களில் மலிவு விலையில், சுத்தமான உணவும் கொடுக்கப்படுவதை எடுத்துரைத்த அந்த அறிக்கை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளும், ஒன்பது முனிசிபாலிட்டிகளும் தக்கதொரு ஆய்வு செய்யாமல் அம்மா காண்டீன்கள் திறந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்களைப் பட்டியலிட்டது. கோதுமை மாவு டி.யூ.சி.எஸ் மூலம் வாங்கியதில் அதிகச் செலவு ரூபாய். 30.85 லக்ஷம் என்றும், மற்றவகையில் அதிகச் செலவு ரூபாய் 2.78 கோடி என்பதையும் சுட்டியுள்ளது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதைத் தவிர, முனிசிபாலிட்டிகளும், மாநகராட்சிகளும் பற்றாக்குறையை ஈடு செய்யத் தவித்தன.

அந்த அறிக்கையில் இவை சமூக நலப்பணி; வணிகம் அல்ல என்ற அரசின் பதில் அடக்கம். ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அந்தக் கேள்வி எழவில்லை. அநாவசியச் செலவும், பற்றாக்குறையும்தான் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.

உதவி:

TIMES OF INDIA
Mismanagement of Amma canteens cost Tamil Nadu Rs. 5.69 crore: CAG
TNN | Sep 3, 2016, 02.16 AM IS

***

சித்திரத்துக்கு நன்றி:
http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01193/CAG_-_LOGO_jpg_1193235e.jpg

******
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *