கிரேசி மோகன்

—————————————–

நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
நானல்ல என்றான் நகைத்து….(113)

நட்ட மரமது நச்சுமர மாயினும்
வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
தீரவழி செய்தல் தவறு….(114)

மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)

போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
பரமசிவன் மூலம் பிறப்பு….(116)

அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)

காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)

நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….கிரேசி மோகன்….!

நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120).

பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
அபாயம் அகன்றது அன்று….(121)

சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
வந்திடச் சொன்னான் விரைந்து….(122)

ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
விண்முதலோன் முன்பு வரவு….(123)

சர்கம் இரண்டு சுபம்….!
————————————–
—————————————————————————

சர்கம்- மூன்று
—————————

ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
வானூறும் நட்பை விடுத்து….(124)

”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.