திருவேணும் என்போர்க் கெல்லாம் –திருமாலின் பார்வை வேணும்! திருவோண நாளில் பெருமாள் –திருவடியை எண்ண வேணும்! ஒருஅடியால் உலகைத் தொட்டு –ஒருஅடியை விண்ணில் வைத்து மறுஅடியைத் தலையில் ஆழ்த்தி –மகாபலிக்கு ஞானம் தந்தான்!
சிறுவனாக வந்து உள்ளச் –செருக்கினைத் துடைத்த போது மறுபிறவி இல்லா மன்னன் –மகாபலிக்கு மண்ணில் மீண்டும் வரும்படிக்கு வரமும் தந்தான்! –வரவேற்று மகிழ்ந்த மக்கள் திரும்பியதம் மன்னன் கண்ட –திருவோண தினமே வாழி!
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.