கற்கும் குணமே கலைவாணி ! கர்வம் துளியும் தலைகாட்டா சொற்ப அறிவும் கலைவாணி ! சுடரும் ஒளியாய் விரிவானாய் நிற்கும் கருணை கலைவாணி ! நிசமோ பொய்யோ உலகத்தில் அற்பப் பொருளின் உயிர்க்குள்ளும் ஆழ்ந்து கிடப்பாள் கலைவாணி !
புத்தம் புதிய மலர்போலே பூமி முழுதும் அவள்மாயை ! பித்தன் எனக்குள் இயல்பான பிரும நிலையும் அவள்சாயல் ! கத்துங் குழந்தை குரலுக்கும் கணினி உலகின் திறனுக்கும் வித்தை விதைக்கும் விவசாயி வேதக் கருவாம் கலைவாணி ! (09.10.2016 19.38 pm)
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.