அன்பினிய வாசக நெஞ்சங்களே!

அன்பான வணக்கங்களுடன் ஒரு துயரமிகுந்த வாரத்திலே உங்களுடன் மனம் திறக்கிறேன். காலதேவனின் சக்கரச் சுழற்சி கொடுத்த தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் இன்னும் விடுபடாத
%e0%ae%9c%e0%af%86ஒரு நிலை. தமிழகத்தின் தலைவியாய் கோலோச்சி வந்த , “அம்மா” என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்பட்ட”புரட்சித் தலைவி ” செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்கள் இயற்கையோடு சங்கமாகி விட்ட நிகழ்வு அனைவரது நெஞ்சத்திலும் ஒரு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பிழைப்பாரா? மாட்டாரா? என்று தவித்துக் கொண்டிருந்த நெஞ்சங்களில் ஓடிய உணர்வலைகளின் பிரதிபலிப்பை பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்க்க முடிந்தது. மக்கள் தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போலத் தவித்த காட்சிகள். ஒரு நாட்டின் தலைவியாக மட்டுமல்லாமல் ஒவ்வொருவரது வீட்டின் தலைவியாகவும் வீற்றிருந்தவர் செல்வி ஜெயலலிதா என்பதைத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தது.

பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளை
ஓட்டுமொத்தமாக “கண்ணாடிக் கூரை அதாவது ஆங்கிலத்தில் glass ceiling” என்பார்கள். இதன் அர்த்தம் உச்சி தெரியும் ஆனால் அதை எட்டிப்பிடிக்கjayalalithaa சமுதாயத்தில் பெண்கள் என்பதால் பல தடைகள் முட்டுக்கட்டையாக உள்ளது என்பதுவே ! ஆனால் அந்தக் கண்ணாடிக் கூரையை உடைத்துச் சிகரத்தைத் தொட்ட சில பெண்களில் செல்வி ஜெயலலிதா என்று கூறுவது மிகையாகாது. நேற்றைய பல தொலைக்காட்சிச் சேவைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் அவர் “இரும்பு மனுஷி, iron lady“ என்று விவரிக்கப்பட்டார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்கு பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது யாராலும் மறுக்கப்பட முடியாதது. ஆசியாவில் இதுவரை நாட்டின் தலைவர்களாக சில பெண்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரை விடவும் செல்வி ஜெயலலிதா ஒருவகையில் மேம்பட்டவர் என்று சொல்லலாம். எப்படி என்கிறீர்களா ?அவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் பின்னணி இருந்தது.

உதாரணமாக சிறீமாவோ பண்டாரநாயக்கா , அன்னை இந்திராகாந்தி, பாகிஸ்தான் முன்னைநாள் தலைவி பெனிசீர் பூட்டோ , இவர்கள் அனைவரும் அரசியல் பின்னணியில் வளர்ந்தவர்கள். ஆனால் ஜெயலலிதாவோ சாதாரண கலைக்குடும்பத்து பின்னணியில் இருந்தது தானகவே தன்னை வளர்த்துக் கொண்டவர். தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான உரத்தைத் தான்தேடித் தனக்கு ஊட்டிக் கொண்டவர். எதிர்ப்புகள் எத்தனை வந்திடுனும் தளராத மனத்துடன் அடுத்த கட்ட நகர்வை நோக்கித் தனது திட்டத்தைத் தீட்டும் வல்லமை கொண்டவர்.

எத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணினாலும் வாழ்வினில் ஒரு தூய இலட்சியத்தை வளர்த்துக் கொண்டால் அதன் சிகரத்தைத் தொடமுடியும் எனும் நம்பிக்கை அனைவரது மனங்களிலும் துளிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். இன்றைய மேலைநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் பிரபலமான அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் காட்டும் அரசியல் பாதைக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை மக்கள் எடுப்பது போன்ற ஒரு காலகட்டத்தில், ஒரு அரசியல்வாதியால் மக்களின் மனதில் இத்தகைய உயரிய இடத்தைப் பிடிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் செல்வி ஜெயலலிதா. அரசியல் என்பது அரசியல்வாதிகளின் பணி, அதற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது எனும் கருத்தை மாற்றி அரசியல் எனும் இந்த அரங்கில் சரியான வகையில் செயல்பட்டு வாழ்வின் அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற திட்டங்களைச் செயற்படுத்தினால் மக்களின் உணர்வுபூர்வமான மதிப்பை பெற்றுவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிச் சென்றுள்ளார் செல்வி ஜெயலலிதா.

இவ்வுலகத்தின் கசப்பான உண்மை ஒன்று. ஒரு மனிதனின் நல்ல பல பண்புகள் அவன் இவ்வுலகை விட்டு மறையும்போதுதான் பேசப்படுகிறது. அதேவகையில் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அவரைப் பற்றிய பதிவுகளில் அவரின் பல தனிப்பண்புகள் வெளிவந்திருக்கின்றன. அவரது இல்லத்தில் அவர் 10000 புத்தகங்களுக்கு மேல் வைத்திருந்தார் என்பதும், பலவகையான புத்தகங்களைப் படிப்பது அவரது பழக்கம் என்றும் அறியும்போது வியப்பாக உள்ளது. அது மட்டுமின்றி அவர் ஒரு எழுத்தாளர் என்பது எனக்கு ஒரு புதுச் செய்தியாக இருந்தது. துக்ளக் பத்திரிகையில் “எண்ணங்கள்” எனும் தலைப்பில் கட்டுரை எழுதியவர். அக்கட்டுரைகளை அவர்தான் எழுதியது என்பதைத் திரு சோ. அவர்கள் பல காலங்களுக்குப் பின்னால் கூறியுள்ளார். அது தவிர சில நாவல்களும் எழுதியதாகக் கேள்விப்பட்டதுண்டு.

இவரது திறமையை நன்கு மதிப்பிட்டார் புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் அவர்கள். தனக்குப் பின்னால் தனது கட்சியை முன்னேற்றக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பதனால் இவரை அதிமுகவில் முன்னிலையில் நிறுத்தினார் புரட்சித் தலைவர். ஈழத்துத் தமிழ்மக்களின் இன்னல்களை நன்கு உணர்ந்திருந்தார். ஈழத்துத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இவரது மறைவு தமிழ்பேசும் மக்கள் அனைவரினது இதயங்களிலு,ம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய தேசிய அளவில் பெயர் பெற்ற ஒரு உயரிய தலைவராகத்தான் செல்வி ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசத்தின் பல பாகங்களிலும் இருந்து பல அரசியல் தலைவர்கள் வந்து குவிந்தது ஒன்றே இதற்குச் சாட்சியாகிறது. அரசியல் நாகரீகம் என்பது அழகாய் நிலைநிறுத்தப்படுமளவிற்கு இவரது அரசியல் ஆதிக்கம் இவரை விமர்சித்த எதிர்க்கட்சியாளர்கள் மனதிலும் ஒரு நன்மதிப்பை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பது நிரூபணமாகியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் இவரது அரசியல் திறமையையும், அற்புதத் தைரியத்தையும் பாராட்டி இரங்கல் உரையளித்தது இவரது ஆழ்ந்த அரசியல் அறிவுக்கும், அனுபவத்திற்கும் சான்றாகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அடுத்தடுத்து இரண்டுமுறை தொடர்ந்து வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமை இவரையே சாரும். இன்று தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை நிறுவி இந்தியாவின் ஒரு முக்கிய கேந்திர நகரமாக சென்னை மாறுவதற்கு இவர் கொடுத்த ஸ்திரமான அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம் என்று கூறலாம்.

இதே வாரம் இவரது இறுதிச்சடங்குகள் முடிந்த மறுநாள்%e0%ae%9a%e0%af%8b-%e0%ae%9c%e0%af%86 காலை இவர் மீது அன்பும், பாசமும் கொண்ட மூத்த அரசியல் விமர்சகர்,எழுத்தாளர் திரு சோ அவர்கள் இவ்வுலகத்தை விட்டுச் சென்றது அடுத்த துயரமிகு செய்தியாக எமது காதுகளில் விழுந்தது. பண்பட்ட, நேர்மையான , துணிச்சலான ஒரு தார்மீக பத்திரிகைவாதி திரு.சோ அவர்கள். தனது மனத்தில் பட்டதை ஒளிக்காமல் அப்படியே எடுத்துக்கூறும் பண்பினில் திகழ்ந்தவர் திரு.சோ அவர்கள். அவரது நகைச்சுவைப் பாணி தனித்துவமானது. பூடகமாக அரசியல் கருத்துகளைத் தனது நகைச்சுவை கலந்து அளிக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் திரு.சோ அவர்கள்.

மறைந்த இவ்விருவருக்கும் எனது அன்பு கலந்த அஞ்சலிகளை செலுத்திக் கொள்வதோடு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *