’மயிலாப்பூர் பெருமாள் புகழ்’’
————————————————————

தானன தானன தானன தானன
தானன தானன -தனதான
————————————————————–

’’நானது போகவும் தானது ஆகவும்
சோணையு லாவிய -ரமணேசர்
பேதமி லாதணில், வானரம் தோகைக
லாபமும் மானுடம் -தனிலேகம்

காணும்சு பாவமும் , யோகவி தானமும்,
ஞானசி வோகமும் -அருள்வாயே
தேவகு லாம்தொழ சூரிரு கூறுற
வேலேறி ஈசரின் -நுதல்பாலன்
வானவ ஆனையை வேடுவ மானையும்
கூடும ணாளரின் -முறைமாம
நானுள போதிறை ஏனது வீணெண
பாலனை ஏசிடு -இரணீயன்

ஆணவ மோடவன் ஆவிகு லாவிட
தூணிடை போயொளி -நரசீய
மாமயி லாபுரி கேசவ ஸ்ரீநிதி
வாசவ மாதவ -பெருமாளே….கிரேசி மோகன்….!

 

தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன -தனதான
சீனிவாச பெருமாள்
———————–

“ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்

தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை
வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா

கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்

நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.