கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“ஆண்டாள் -25’’….
————————————–
‘ஒருத்தி மகனை ஒருபத்து மூன்றில்
இருத்திஆனாள் வைகுண்ட இல்லாள், -கருத்தவன்
ஆரா அமுதன் அடைந்து மணத்தானே,
நாரவள் பூநார ணன்’’….கிரேசி மோகன்….
”ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
கருத்தவரே கம்ஸவதக் கர்த்தா -திருப்புத்தூர்(திருவில்லி புத்தூர்)
கோதை திருப்பாவை பாதை வழிசென்று
கீதை உரைத்தவரே காப்பு”….கிரேசி மோகன்….!