கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’மாட்டுப் பொங்கல்’’
————————-
”வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்
கூட்டத் துடன்கலந்த கோபாலா -மாட்டுக்கு
பொங்கலின்று, மீண்டும்நீ பூமிக்(கு) எழுந்தருள்,
எங்களைக் கால்நடையாய் ஏற்று’’….கிரேசி மோகன்….
ஸாரி கேசவ்….பசு என்று எண்ணிவிட்டேன்….காளை என்று தாங்கள் கூறியதால், வெண்பாவில் திருத்தம்….!
”வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்
கூட்டத் துடன்கலந்த கோபாலா -மாட்டுக்கு
ஜல்லிக்கட்(டு) இன்று, சுதர்ஸன வேகத்தில்,
ஜல்திஅலங் காநல்லூர் ஜாவ்(ஹிந்தி)’’….கிரேசி மோகன்….