கவியோகிவேதம்
நெஞ்ச உலைதனிலே- சொற்கள்
…நின்று கனல்வதற்கு
பஞ்சமே இன்றிஎன்- தாய்
.பராசக்தி கைகொடுத்தாள்!
.
சந்தப் பெரும்நிலவில்- அவளின்
…சந்நிதி கண்டுகொண்டேன்!
இந்தக் கரங்களினால்- தொழுது
… இனிய கவிபடைத்தேன்!
.
சிவனைத்தான் பாரதியும்—என்றும்
..சிறந்த ‘உலை’என்றான்!
அவனைத்தான் விஞ்ஞானி—நல்ல
.. அணுஉலை யாய்க்கண்டான்! .(Atomic Energy)
..
.( கற்பனை செய்யுங்கள்—கவிகாள்!!
..கல்-மொத்தை அந்தஉலை!)
சிவனுக்குள் சேமிப்புஉலை— அதைஊதி
சக்தியும்– செகம்செய்தாள்!
சுவைஊதி ஊதிஊதி- செகத்துள்
..சுவாரஸ்யம் கூட்டிநின்றாள்!
.
எப்பொருளும் தான்வளர- உள்ளே
..இனிய கனல்வைத்தாள்!
செப்படி வித்தையைப்போல்—வித்துள்
…. சிறந்த-உரு தேக்கிவைத்தாள்!
.
காய்க்குள் புளிப்புவைத்து- மரத்தில்
….கண்ணாகப் பாதுகாப்பாள்
தாய்க்குள் அன்புவைத்து—அவளில்
….தன்னை ஒளித்துவைத்தாள்!
.
வயிற்றுள் கனல்வைத்தாள்—பண்டம்
…. வசக்கும் திறன்கொடுத்தாள்!!..( ஜாடராக்னி)
ஒயிலாய் விசிறுமந்தக்- கடல்(உ)ள்
….ஒப்பிலாத் தீயும்வைத்தாள்!….. (பாடவாக்னி)-
..
கொடுக்கில் நெருப்புவைத்தாள்!—தப்பக்
.. கொடுத்த கவசம்அது!
வெடுக்கும் (சில?) மருமகளின்- வாயில்
..விஷக்கனல் ஏன்கொடுத்தாள்?
.
பனியில் கனல்உண்டே!—நம்மைப்
….பதைபதைக்க வைக்கிறதே!
பனித்தூள் பட்டகிளை— காய்ந்தே
…பாய்வெயிலில் நீள்கிறதே!
ஆம்!
முக்தி தரும்சிவனோ—சித்தனுள்
…மோனம் தரும்குகைதான்!
சக்தி, உலவும்அன்னை!—அவளைச்
.. சார்ந்ததே இவ்வுலகம்!
மொக்கையாய் உள்ளலிங்கம்—தவம்
… மூட்டும் பெருத்தஉலை!
சக்கையிலும் கைநனைத்தே—சாகசம்
.. .தரும்சக்தி தாய்மைநிலை!
********************************************

Leave a Reply