கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பீதாம் பரமாட பீலி மயிலாட
தோதான தோழர்கள் தோளிலுறி-மீதேறி
வெண்ணையை வாரி வழங்கிடும் வாசுதேவக்
கண்ணனை நெஞ்சே கருது….
வாய்ப்பூதான் வாடிடுமோ,! வாழ்விலாழ் வாராகும்
வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்
கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ
ஏற்றம் தரவா எனக்கு….கிரேசி மோகன்….!