கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
களிகொள் அடியார்தம் கூட்டு….
’’பாற்குடம் மீதேறி புல்லாங் குழலூதும்
பாற்கடல் கண்ணன் பதங்களை, -யார்கடன்
பட்டார்போல் மேயும் பசுவின் விடாமுயற்சி:
கெட்டாலும் மேன்மக்கள் கன்று’’….கிரேசி மோகன்….!
”பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!