சி.ஜெயபாரதன்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில்
குயவன் கரங்கள் ஈரக் களிமண் பிசையும்.
எதற்கும் அடங்கா நாக்கு முணுமுணுத்து,
மெதுவாய் தம்பி ! மெதுவாய் எனக்கெஞ்சும்.
[37]
For in the Market-place, one Dusk of Day,
I watch’d the Potter thumping his wet Clay:
And with its all obliterated Tongue
It murmur’d – ‘Gently, Brother, gently, pray! ‘
[38] பண்டை முதல் அதுபோல் கதையாய்
அடுத்தடுத்த மானிட வம்சா வழியே மீண்டு,
அந்த மண்கட்டி பூமியை நிரப்பிய வண்ணம்
படைப்பாளி மானிடமாய் வடிக்க விலையா ?
[38]
And has not such a Story from of Old
Down Man’s successive generations roll’d
Of such a clod of saturated Earth
Cast by the Maker into Human mould?
[39] கிண்ணம் நிரப்பு; அது மீள எது தூண்டும்
காலம் எப்படிக் கடக்குது நம் கண்முன்னால்
நாளை பிறந்திலது, நேற்று கடந்துளது
ஏன் கவலை அவற்றால் இன்றினிக்கும் போது
[39]
Ah, fill the Cup: – what boots it to repeat
How Time is slipping underneath our Feet:
Unborn To-morrow, and dead Yesterday,
Why fret about them if To-day be sweet!


Leave a Reply