மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்

0

ab

அன்பானவர்களுக்கு

நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றண்டிரும்

என்றும்

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல்சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும்

என்றும்

ஆன்மிகத் தொண்டாற்றிய பெரியோரை “இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று வாழ்த்துவது ஒரு மரபு. உழைப்பின் சுரண்டல் குறித்த தத்துவத்தை உலகுக்கு வழங்கிய மனிதரது சிந்தனைகளுக்கு அழிவில்லை.

மனிதகுல விடுதலைக்காக சிந்தித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களது இருநூறாவது ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது… (மே 5, 1818: அவரது பிறந்த நாள்). அவரது பங்களிப்பை அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் சில அரிய முயற்சிகளில் பாரதி புத்தகாலயம் ஈடுபட்டு வருகிறது. மெயிலை இணைத்துள்ளேன்…

சென்னையில் இருப்போர், விருப்பமுள்ளோர் நாளை காலை ஒன்பது மணிக்கு இந்த விழாவில் வந்து பங்கேற்க வேண்டுகிறேன்.

எஸ் வி வேணுகோபாலன்

———- Forwarded message ———-
From: Thamizh Books <thamizhbooks@gmail.com>
Date: 2017-05-04 19:22 GMT+05:30
Subject: மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்
To:

அழைப்பிதழ்
மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு மார்க்ஸ்,எங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. இதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.சம்பகலஷ்மி, பேரா.வெ.பா.ஆத்ரேயா, ஆய்வாளர் வ.கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தங்கள் வரவை எதிர் நோக்குகிறோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.