கல்வித்துறை – நீட் தேர்வில் சீர்கேடுகள்
நீட் தேர்வு பற்றி பலவேறான கருத்துகள் இருக்கும் சூழலில் , இத்தேர்வை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியதில் நாகரிகமற்ற முறையில், அநாகரிகத்தின் உச்சத்திற்கேச் சென்று அந்தத் தேர்வுச்சமயத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்வு நிர்வாகிகள் செய்துள்ள செயல்கள் கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கான டிரஸ் கோட் தேர்வு விண்ணப்பத் தாளிலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டனர். பெண்களின் உள்ளாடைகளைக் களையச்செய்வதும், துப்பட்டாவை அகற்றியதையும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிவதை தடை செய்ததும் எந்த சட்டத்தில் உள்ளது? இதைவிடுத்து தேர்வு மையங்களின் பெயர்களிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் நீட் தேர்வு மையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? தேர்வு எழுதச்செய்யும் மாணவர்களுக்கு தேவையற்ற இந்த கெடுபிடிகளால் மன அமைதியிழந்து தேர்வு சரிவர எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு தேர்வு நடத்தவேண்டும். இந்த தவறுகள் செய்தவர்களை, மாணவர்களின் ஒரு வருட வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்களா?