பஞ்சாயத்து ராச்சியம்!

0

பவள சங்கரி

ஊர் பஞ்சாயத்துகளுக்கு உயர்நீதி மன்றம் அளித்த அதிகாரத்தின்படி இனி அந்தந்த ஊர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்றுகூடி எங்கள் பகுதியில் இனி மதுபானங்கள் விற்பனை தேவையில்லை என்று தடைவிதித்தால் அந்தப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடைவிதித்து உயர்நீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. இனிமேல் அரசுகளையோ, கட்சிகளையோ குறைகூறுவதை விட்டுவிட்டு அவரவர் பகுதிகளை சரியாக நிர்வகிக்க பொது மக்களும் முன்வரலாம். பஞ்சாயத்து ராச்சியம் முறையில் இது ஒரு மைல்கல்!

மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மக்கள் வாழும் பகுதிகளுக்குக் கொண்டுவரவும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் மக்களை கைது செய்வதற்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.