கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆண்டவா! நீலவண்ணம் பூண்டவா! நீள்விசும்பில்
நீண்டவா! பாரதப் பாண்டவராய் – வேண்டவா?
தூண்டவா பக்தியால்? தீண்டவா பாரதியாய்?
கீண்டவா தீங்கைக் கிழித்து”….
”உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே – கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்”…. (கிரேசி மோகன்….!)