kesav

 

’’புள்ளேறி சாரங்க பாணி வருகின்றார்-
கள்ளூறும் கூந்தலாள் கோமள -வல்லிகேள்வர் –
ஆரா அமுதர் அடியேன் குலக்கடவுள்: –
வாராய் வினைதீர்க்கும் வில்’’….கிரேசி மோகன்….எனது தாத்தா ‘’கும்பகோணம் கோமளவல்லி நாயிகா சமேத ஆரா அமுதா’’ என்று சொல்லாமல் இரவு உறங்கியது கிடையாது….நன்றி கேசவ்….!

தனந்த தானனத்த தனந்த தானனத்த
தனந்த தானனத்த -தனதான
கும்பகோணம்

———————

பெருமாள் திருப் புகழ்….

“அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்
கிருந்த வாறிருக்க -ரமணேசர்
புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
அமைந்த யோகநித்ரை, -வனமாலி
சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
முகுந்த வாவகத்துள் -குடியேற
புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்(கருட வாகனத்தில்)
பறந்து வாயெனக்கு -துணையாக
உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
குடந்தை மாநிலத்து -பெருமாளே”….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *