சிவபிரதோஷம் – “சிவனுடை அன்பகம்”

0

 

மீ.விசுவநாதன்

ame
சிவனை வணங்கிடச் சிந்தை அமைதியில் தேர்ந்திடுமோ ?
சிவனை நினைத்திடத் தேர்ந்தநல் ஞானமும் சேர்ந்திடுமோ?
நமனை உதைத்தவன் நானினைக் கொல்ல நடுங்குவனோ ?
இவனைத் திருத்திட இத்தனை காலமேன் என்சிவனே !

கருமைக் குழலுள் கருணை மழையினைக் கட்டியவா !
இருமை விழியால் எளியோர் வினைகளை நீக்கிடவா !
பெருமை கொடுக்கும் பெரும்பே(ர்) அடியவர் பெற்றவனே !
அருமை அடியேன் அகமே சிவனுடை அன்பகமே !

(இன்று 06.05.2017 பிரதோஷம்)
(பாவினம்: கட்டளைக் கலித்துறை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.