வாழ்த்துகள் கோவை!

0

பவள சங்கரி

தலையங்கம்

கோவை மாநகராட்சியில் வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சி அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடக்க வேண்டியதில்லை. கணினிமயமாக்கப்பட்டுள்ள, அலுவலகத்தில் அங்கிருக்கும் திரைச்சீலைகளுக்குக்கூட கையூட்டு தர வேண்டியதில்லை. கட்டிட வரைபடங்கள், அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்துவிட்டால், உடனடியாக குறுஞ்செய்தி மூலமாக பதிவு எண் அளிக்கப்பட்டுவிடுகிறது. அதில் எத்தனை நாட்களுக்குள் அந்த வரைபடம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தகவல் அறிவிக்கப்படுகிறது. அந்த நாட்களுக்குள் ஒப்புதல் சீட்டும் வழங்கப்பட்டு விடுகிறது. மாற்றங்கள் தேவைப்படும்பட்சத்தில் அதன் காரணங்கள் கேட்டும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இதன் மூலமாக குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு பைசா கையூட்டு கொடுக்காமல் ஒப்புதல் பெறும் முறை கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. கோவையில் இது முடியும் என்றால் ஏன் ஈரோடு, சேலம், சென்னை, அகமதாபாத், குஜராத் போன்ற அனைத்து நகரங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. மத்திய அரசு இதற்கான ஒரு செயலியை உருவாக்கி முதலாவதாக அனைத்து மாநகராட்சிகளிலுமாவது செயல்படுத்தினால் மிகவும் பயனுடையதாக அமையும். இலஞ்ச ஒழிப்பின் முதல் நடவடிக்கையாகக்கூட இதைக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குள் அலுவலர்களின் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விவரம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நடுவண் அரசு மாநகராட்சிகளிலும் இதை உடனடியாகச் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *