மிஷ்கினின் அடுத்த படம், ‘யுத்தம் செய்’
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம், ‘யுத்தம் செய்’.
கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் வசனப் பகுதிகளையும், பாடல் காட்சிகளையும் முடித்துவிட்ட மிஷ்கின், தற்போது டப்பிங் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்புப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இம்மாத இறுதியில் படம் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துடும் என்றும் தெரிவித்தார்.
சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயப்பிரகாஷ், லட்சுமி, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் செல்வா, தீபாஷா, ஈ.ராமதாஸ், இயக்குநர் மாரிமுத்து, யுகேந்திரன், ஸ்ருதி, சுருஷ்டி டாங்கே சங்கர், மாணிக்க விநாயகம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு, சத்யா. பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரான இவருக்கு இது முதல் படம். இசையமைப்பை அறிமுக இசையமைப்பாளர் ‘‘கே’’ கவனித்துக்கொள்கிறார். கலை – அமரன், படத் தொகுப்பு – காகின், சண்டைப் பயிற்சி – ‘ஆக்சன்’ பிரகாஷ்.