’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’(பொன்மகள் வந்தாள்)….!

0

VaraMahaLakshmi
“பிருகு குலத்தில் பிறந்த திருவே
உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….!
—————————————————————————————————————————

பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
——————————————————————————————————–

“படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….!
——————————————————————————————————————

“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….!

“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
பாலின் நிறத்தில் பொலிவு”….!

“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….!கிரேசி மோகன்….!
————————————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.