கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-கிரேசி மோகன்
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க – கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவைகள் சுற்றிட,
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….!
எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
தொழில்காதல், தாமரைத் தொப்புள் – சுழியில்
உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
அலகிலாக் கண்ணன் அழகு….!
வேணு இசைக்கையில் வெண்ணெய் புசிக்கையில்
வானில் வரைதூக்கி நிற்கையில் – ஊணும்
ஒருகால் உதவ , மறுகால் தயாராய்
ஒருகால் குரல்வருமுன் கேட்டு….