கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
காதல்கூத் தாடுகிறான், காண்டீ பனைமறந்து:
கீதையா! ராதையா! கூறு!’’….!
நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
களிகொள் அடியார்தம் கூட்டு….
நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
வெட்டுநீ துண்டிரெண்டா வோம்….
ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
தலைக்கேற கண்ணனவன் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் தூதுவிட்டாள் WAR….!
பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!