images (2)
“மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
பொய்க்கமா போட்டுப் பழக்கு”….!

முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
இல்லாத பேரிடம் செல்….கிரேசி மோகன்….!

தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
எதையும் மனமே இதயக் கனியாய்
கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!

ஓடியாடி பாடுபட்டு ஊரை விலைபேசி,
கோடிகோடி செல்வம் குவிந்தாலும் -மாடிலேறி(எருமை மாட்டிலேறி)
கல்லறைக்குக் கூப்பிடும் காலன் மனம்மாறி,
சில்லறைக்குச் செல்வானா சொல்….

முல்லைக்குத் தேரை. மயிலுக்குப் போர்வையை,
புல்லுக்கும்(வள்ளலார் போல்) வாடும் புனிதத்தை -உள்ளுக்குள்
வாழும் கருணை வெளிப்பாடு என்றுந்தன்
பாழும் மனதில் புகட்டு….

கலப்பை முழுங்கி கஷாயம் குடிப்பாய்
மலைத்தது போதும் மனமே! -நிலைப்பாய்
எஜமான் வருகை எதிர்பார்த்(து) இருக்கும்
நிஜமான ஊழியனாய் நில்….

முந்தைப் பழவினைகள் முற்றும் ஒழிந்திடும்
சிந்தை தெளிவுற்று சித்தமாகும் -கந்தர்
அனுபூதி தன்னை அருணகிரி பேரால்
மனமோதி வாழ்வோர்த மக்கு….

நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
போட்டாலும் வைகுண்டம் போனாலும் புத்திக்கு
மாட்டாது மாயா மனம்….

எங்கிருந்தோ வந்தென்னை ஏக்கத்திற்க்(கு) உள்ளாக்கி
அங்கிங் கெனாது அலைக்கழித்து -தொங்கிடும்
மந்தியே, நெஞ்சே, மனமே உனக்கேன்
புந்தியே இல்லாமல் போச்சு….
பழைய குருடி புதிய கிழவி
விழைய மறுத்திடும் வேசி -குழைய
தினமும் கொடுப்பாள் திருட்டு சுகத்தை
மனமென்ற அம்மட மாது….()….

நீயாய் நினைப்பது ஞாபகத் தாலெழுந்த
மாயா மனதின் மமகாரம் -தாயாய்
தகப்பனாய், பிள்ளையாய் தன்னைத்தான் எண்ணல்
மிகப்பெறும் சூழ்ச்சியா மே….

மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *