கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சீமந் தசரணியில்(அம்பாளின் நெற்றி வகிடு) சிந்தூரம் பூசிடும்,
காமம் தனைக்கொல்லும் கற்பக -நாமம்தனை
நாளும் ஜெபிக்க நவராத்ரி நாட்களில்,
கோளென்ன கொம்பா!கொக் கா!’’….!
மாரி, சமயபுரக் காரி, சதுர்வேத
தாரி, பிரியா அரனர்த்த -நாரி,
லலிதஅதி காரி, கலிதீர சேரீர்,
பலித பவானி பதம்….கிரேசி மோகன்….!