புத்தாண்டு அன்று பத்மாவதித் தாயார்(திருச்சானூர்) தரிசனம்….கீழ் திருப்பதியில் நாடகம்….தாயார் சந்நிதியில் தோன்றிய வெண்பா….

170926 Padmavathi - Devi series 07 - lr

“மலைமேல் மால்மணாளர் மேவிட, மங்கா,
அலமேல் அடிவாரம் ஆள்வோய், -கலைமேவி,
நாடக பாக்கியத்தை, நாங்கள் அடைந்திட,
ஆடகச்செம் பொன்னே அருள்”….!
“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில்பத் மாவதி
பாலின் நிறத்தில் பொலிவு”….!
“சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
பாகிபத்மா பாதாம் புஜம்”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *