சொல்லின் செல்வி

 

மஞ்சள் தாலி எடுத்து
என் கைகளால்
என்னவளை வலதுபுறம் வளைத்து
மூன்று முடிச்சு ஒத்திகையை
நித்தம் நித்தம் எண்ணி
ஏக்கம் கொண்டுதான் இருக்கிறேன் !

 

வாழ்கையும் போய் கொண்டுதான் இருக்கிறது
வாலிப வயதை தாண்டியது..!
வில்லதனை கொடுத்து உடைக்கச் சொன்னால்
நொடிப் பொழுதில் உடைத்து விடுவேன்;
சொல்லதனை கொண்டு சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்கள்
ஜாதகம் சரி இல்லை என்று;

 
என் கட்டில் கேலி செய்கிறது
”கடைசிவரை தலையனையைத் தான் நீ தழுவவேண்டுமென்று.!!”

என் கைபேசி சிரிக்கிறது..
”உன் இச்சையை நான்தான் தீர்க்க வேண்டுமென்று..!”

.எனது இருச்சக்கரம் வாகனம் சலித்துக் கொள்கிறது
”எவ்வளவு நாள் உன்னை மட்டுமே சுமக்கவேண்டுமென்று !”

மனதிற்குள் உள்ள போராட்டத்தை
மறைத்துக்கொண்டு
ஆண் மகனென்ற மிடுக்கில்
மீசையை முறுக்கிக்கொண்டு
வெளிப்புறமாய் கர்வத்தை
மாயை மீனாய் காட்டிக்கொண்டு
தீர்ந்துவிடும் வாலிப வயதுகளில்
தீராத ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

என் மனநிலை புரிந்துக்கொண்டு
என்னைப் போலவே
மணமேடைக்கு காத்திருக்கும்
முதிர்கன்னி எங்கேனும் உண்டென்றால்
தனியறை ஜன்னலுக்குள்
அனுப்பிவிடு
தென்றலே..
என் வசந்தக்கால தென்றலே.!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மன(ண)நிலை நிலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *