கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

’’ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
ஊது குழலாய் உருமாறி என்நாளும்
கீதகோ விந்தமதைக் கூவு’’….!
’’ஜாமக் கடுமிருளில் ஜாதிவிட்டு, நந்தனார்
கோமக் களைமேய்த்த கோபாலன் -காமக்
கடும்புனல்(யமுனா) கோபியரைக் கூடியும், உள்ளக்
கடும்பிரமச் சாரியாம் காண்….கிரேசி மோகன்….!
