கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பீதாம் பரமவிழ போட்ட நகைசிதற
வேதப்புள் வாகனனை தோள்சுமந்து -பாதாதி
கேசம் குலுங்க களிறுக்கன்(று) ஏகிய
நேசனக் கேசவனை நம்பு….!
முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில்(மும் மூர்திகளில்) -முதலாய்
கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
புருடனைப் போற்றல் பிழைப்பு….கிரேசி மோகன்….!