கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
தாங்கிய திண்தோள் தாமோதர், -சாங்கிய
யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
வாகனமாம் புள்ளேறி வா….
பாமாவின் பாய்ச்சலுக்கு ருக்மணியின் கூச்சலுக்கு
ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய் -காமாய்
கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி
டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….கிரேசி மோகன்….!
ருக்மணியின் காதல் கடிதம் கண்ணனுக்கு….!
———————————————————————————–
‘’கண்ணனுக்கு காதல் கடிதம் எழுதினாள்
உன்னையே நம்பும் உருப்பிணி(ருக்மணி), –அன்னையவள்
அம்பாளைச் சுற்றிடுவேன், ஆலயத்துள் காத்திருப்பேன்
நம்பாள் உனக்காக நான்’’…..கிரேசி மோகன்….!

