°°°°°°°°°°°°°°°°°°°°

தமிழா! தமிழா!! நீ இதுவரை
அடிமைப்பட்டது போதும்! நீ
அவதிப்பட்டது போதும்! போதும்!!
அச்சப்பட்டது போதும்! நீ
அறியாமைப்பட்டது போதும்! போதும்!!

உன்னுள் ஓடும் குருதியனைத்தும்
உறிஞ்சப்பட்டது போதும்! வலிகள் உன்னால்
உணரப்பட்டது போதும்! போதும்!! நீ என்றுமே
நசுக்கப்பட்டது போதும்!
நலிவுபட்டது போதும்! போதும்!!

சாதிமதச் சாக்கடையால் கண்கள்
கட்டப்பட்டது போதும்! தலைகள்
வெட்டப்பட்டது போதும்!போதும்!! கரங்களிரண்டும்
கறைப்பட்டது போதும்! கீழோனென்று உன்னால்
வெறுக்கப்பட்டது போதும்! போதும்!!

மீனவச்சொந்தம் மாற்றானால்
கொல்லப்பட்டது போதும்!
கொடுமைப்பட்டது போதும்! போதும்!!
விரட்டப்பட்டது போதும்!
வஞ்சிக்கப்பட்டது போதும்! போதும்!!

சொந்த மண்ணில் நீ
சுட்டு வீழ்த்தப்பட்டது போதும்!
சுரண்டப்பட்டது போதும்! போதும்!!
சிதைக்கப்பட்டது போதும்! நாடின்றி
சிதறப்பட்டது போதும்! போதும்!!

இதுவரையும் தமிழா நீ
ஒடுக்கப்பட்டத் தளையறுக்க
விடுக்கப்பட்ட கோரிக்கைகட்கு செவி
மடுக்கப்படாத நிலையெண்ணி
வருத்தப்பட்டது போதும்! போதும்!!

இனியேனும்
தமிழன் என்ற உணர்வு கொண்டு
தரணியெங்கும் தலை நிமிர்ந்து
ஒன்றுபடுவாய் தமிழா! தமிழா!!
துன்பப்பட்டது போதும் தமிழா! எதையும்
வென்றெடுப்பாய் தமிழா! தமிழா!!

– ஆ.செந்தில் குமார்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழா! தமிழா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *