கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Oh, Krishna! You were born as a cowherd with us, so we did not know your greatness. In our ignorance, we have taken liberties with you. Pl forgive us. We realise this relationship with you is forever.
’’பாற்கடல் பள்ளி, பரமபத சோபானர்
நூற்கடல்நா லாயிர நாயகர், -பாற்குடல்
கன்றுகள் மேய்த்தவர், கண்ணனென் காதலர்,
என்றுமவர் கேள்வர் எனக்கு’’…..!
கேள்வர் -கணவர்
எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
சங்குசக்ர சார்ங்கரை சாமியை, -சிங்கத்தை,
முன்நீர் கடைந்த முராரி, இடையனென்(று)
எண்ணியே மாந்தாள் இவள்(ஆண்டாள்)’’….!
‘மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
வாவிதான் பாலாழி விஷ்ணு’’….
‘’பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
சரணத்தில் பல்லவியாய் சேர்’’….
“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டான்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….கிரேசி மோகன்….!
