கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”உக்கிர சேனனவர், அக்கிரமக் கம்சனின்
வக்கிர புத்தி விவேகமது -சிக்கிட,
தந்தைதாய் மீட்பு, தகப்பனறிந் தார்கண்ணன்,
விந்தை புரிகின்ற விஷ்ணு’’….!
பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
வேரொன்றும் இல்லா விருக்ஷமவர் -யாரென்று
கேட்டால் விளங்காது! ,கேசவ் வரைந்தவரைக்
கோட்டில் பிடித்துக் கொடுப்பு’’….கிரேசி மோகன்….!
