கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அக்ரூரர் கண்ணனை ஆராதித் தல்கண்டு
உக்கிர(நாராயண பக்தியில்) நாரதர் உற்சாகம்: -வக்கிரன்
கம்ஸனின் ஆணயால் கண்ணன் மதுராவுக்கு
இம்ஸையில் கோபியர் இங்கு’’….கிரேசி மோகன்….!
”உலகை அளந்தோன் உபாசனை கண்டு
கலக முனிக்கு களிப்பு: -புளுகனால்(பொய்யன் கம்ஸனால்)
’’போகாதே போகாதே போக்கிரிப் பையாபார்!
தேகாபி மானம் தொலைப்பு!’’….கிரேசி மோகன்….!
கண்ணன் இருந்தாலும் , சென்றாலும் கோபியர் ‘’தேகாபிமானம்’’ தொலைத்தனர்….!