பகவானின் ‘’உபதேச சாரம்’’….!(பாடல்கள் வெண்பாவாக்கம்….)….!

0

 

’’ஈன்று படைக்கும், இறையே பழம்தரும்,
தோன்றும்உன் செய்கை தொணதொணப்பின் -சான்றிதழே!-
சும்மா இருந்து சுகிப்பாய் பழத்தினை
உம்மால் முடிந்தவரை உண்’’….(1)

’’கர்ம்மாய்க்(அட கர்மமே!) காயும்(அழுகிடும்) கனியின் பலனது
கர்மமாம்(கருமம் -செயல்) கடலதில் கொண்டுதள்ளும் -தர்மமாம்
ஆன்மீக வேகமோ ஆழியில்(கடலில்) மூழ்கிடும்:
நான்மீகம் கண்டுணர்ந்து நம்பு’’….(2)

”சொந்த வெறுப்பு, சுவாதீனம், அற்றசெய்கை
தந்த பலாபழத்தை தெய்வபதம் -தந்துவிட
வேரில் பழுத்து விடுதலை தந்திடும்
மாறா மனத்தில்தூய் மை’’….(3)

 
’’சாத்திரங்கள் சொல்யாகம்,தோத்திரங்கள் ஈசர்தீ
நேத்திரர் , மற்றும் நெடுந்திருமால் -கோத்திரங்கள்
செய்யுமயன்,ஆழ்நிலை சூஷ்ஷமங்கள்,யாவுமால்
மெய்,வாய் மனங்கள்,மேன் மை’’….(4)….!

’’உலகுக்கு செய்யும் உபகாரம் ஈசர்
பலகையில் வைத்திடு பூவை : -அலகிலாதோன்
எட்டுருவ பூதமாம்,ஏகாக்ரம் கொண்டால்
தொட்டுவிட லாமவரைத் தேர்’’….(5)….!

மவுன தியானம் மனத்தால் செய்து
கவனம் பிசகாது கொள்வாய் -அவன்விருப்பம்,
சத்தமிட்டு சொல்லும் சகஸ்ரநாமம் அல்லவே
மெத்தையில் எண்ணுவதே மேல்….(6)…..!

உடைப்பின்றி கொட்டும் எண்ணையின் தாரை
தடையின்றிக் கொட்டிடும் தண்ணீர் -படைப்பவர்
ஆழ்நிலை மோனத்தில் அவ்வா(று) ஆழ்பவரின்
ஊழ்வினை ,ஆழியுள்(கடலில்) உப்பு….(7)….கிரேசி மோகன்….!

நானீசர் அல்லது நானென் சொரூபம்
பூணும் தியானம் பரிசுத்தம்: -தோணுகின்ற
பேதம் இரெண்டுக்கும் பார்ப்ப(து) அறியாமை
வேதங்கள் நான்கும் வழி….(8)….!

எண்ணமே இல்லாத ஏகாந்த மோனத்தில்
சின்னவன் மன்னனாய் சித்திலே : -பின்னம்
உயர்ந்திடும் பக்தியில் உன்னதம் காணும்
அயர்ந்திடா ஆன்மன் அது’’….(9)….!

மூலத்தில் மூழ்கு மனமே, இதயமாம்
கோலத்தின் மத்தியில் குந்துவாய்: -தூலத்தின்
சந்தேகம் அற்றதோர் சாங்கியம்(யோகம்), பக்தியது
உன்தேகம் உற்ற உணர்வு’’….(10)…..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *