கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!
” ஆத்திலொரு காலாக, சேத்திலொரு காலாக,
காத்திருக்கேன் கேள்விக் குறியாக! -பூத்திருவை,
மார்பினில் சூடிய மாதவா, நேருக்கு
நேர்பதில் கூறுவதென் நாள்”….கிரேசி மோகன்….!
