நாதா திருவரங்க நாதா தரணிகுரு
நாதா ரமாப்பிராண நாதாவி -னோதா
துயறருக்கும் பாதாம் புயம்மறந்தேன் தீதாம்
மயர்வறுக்க நீர்தான் மருந்து….!

ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
அபரி மிதமான அன்பு….!

கொடுப்பதில் கர்ணன் எடுப்பதில் கள்ளன்
அடித்துத் திருத்தலில் அன்னை -மிடுக்குடன்
ஆசை தொலைத்தவன் ஆட்டத் துணையாக
வேஷம் கலைத்திடும் விஷ்ணு….!

விஷ்ணுவின் நாமங்கள் வேண்டும் பலனளிக்கும்
உஷ்ண வினையை உருக்கிடும் -கஷ்டதசை
துஷ்டன், நமைக்கண்டு தூர ஒதுங்கிடும்
நிஷ்டைக்(கு) இழுத்திடும் நூல்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *