அருள்மிகு ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் அமைப்பும் தலவரலாறும் (நூல் மதிப்புரை)

2

 

பவள சங்கரி

ஆசிரியர் ர.கண்ணன் எழுதியுள்ள, “அருள்மிகு ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் அமைப்பும் தலவரலாறும்” என்ற நூலில், ஆலயம் அமைந்துள்ள, பாரத நாடு துவங்கி, நாமக்கல் எனும் ஊரின் அழகான முன்னுரையுடன் துவங்கும் இந்நூல் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளுடன், நாமக்கல் என்று பெயர் பெற்றதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

நாமகிரி என்ற மலை உருவான விதம் சுவையான புராணக்கதை. ஒரே கல்லால் ஆன இம்மலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை மற்றும் சிற்பங்கள், புடைச்சிற்பங்கள் என அனைத்தும் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளன. அததற்குரிய அழகான புகைப்படங்களும் அங்கங்கு இணைத்திருப்பது சிறப்பு.

ஆஞ்சநேயர் உருவான வரலாறும், அதன் அதீத உயர்வும், அலங்காரங்களும், திருவிழாக்களும் குறித்து சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஸ்ரீநரசிம்மர் பற்றிய தல புராணமும், மும்மூர்த்தி தலம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், கோவிலின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி கொண்ட அரங்கநாதர், மகாலட்சுமி கோவில், நரசிங்கப்பெருமான் போன்ற இறைவடிவங்கள் அமைந்துள்ள குடவரைக் கோயிலின் உட்பிரகாரங்களின் விளக்கங்கள், கோவில் பற்றிய ஏனைய வரலாற்றுத் தகவல்களும் விரிவான முறையில் அளிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ் பெற்ற பசுமையான, புறநானூற்றில் குறிப்பிடப்படும் மலையான கொல்லிமலை பற்றிய சுவையான வரலாறுகளும், வல்வில்ஓரி போன்ற மன்னர்களின் வரலாறுகளும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளவை சிறப்பு.

கி.மு. 13/14 நூற்றாண்டுகளில் பொன்சொரி மலையின் சமணக் குகையின் மேற்புறம் திருக்குறள் வெட்டப்பட்டுள்ள சிறப்பான வரலாற்றுத் தகவலும் குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டு மக்களின் இறை வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்களும் அளித்திருப்பதும் சிறப்பு. சிற்பக் கலைக்கூடம் பற்றிய அழகான விளக்கங்களும் சுவை கூட்டுபவை.

கூலிப்பட்டியில் அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்களின் விளக்கங்களும் தெளிவாகவே உள்ளன.

இலக்கியத்தில் முருகன், முருகனின் அருள் பெற்றவர்கள், திருவுருவ வகைகள், தல வரலாறு, கோவிலின் தனிச்சிறப்பு, கோயில் அமைப்பு, கட்டிட அமைப்பு, வெளித்தோற்றம், கருவறை, ஒவ்வொரு கடவுளர் பற்றிய புராணக் கதைகள் போன்ற அனைத்தும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ள இச்சிறிய நூல் வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமன்றி, அருளாளர்கள், பக்தர்கள் என அனைவரும் விரும்பி வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.

விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள 96 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ 70/-

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அருள்மிகு ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி திருக்கோயில் அமைப்பும் தலவரலாறும் (நூல் மதிப்புரை)

  1. மென்மேலும் பல பல நூல்களை தமிழ் உலகிற்கு தர முடியும் என்ற தன்னம்பிக்கை
    கொண்ட இளம் படைப்பாளர்
    வாரியர் கண்ணன்
    நாமக்கல்

    வாழ்க வளமுடன்
    என வாழ்த்தும்…
    தலைவர்
    மகிழ்ச்சி மன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *