படமும், பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது, பாடல் இப்போது எழுதியது)


———————————-

”மண்ணுண்ட வாயை மகன் திறந்திட,
அன்னை யவள்கண்டாள் ஆச்சரியம்,-தன்னை
மறந்தவள் வாயைத் திறந்திட, மாயை
பிறந்ததவள் வாயுள் விழி’’….கிரேசி மோகன்….!

எந்தக் குழந்தையும் கண்ணன்தான்….!
——————————————————————————

பையன் மண்ணைத் தின்றால்….!
வையாதே…..!
வாய்க்குள் பார்….!
வையம் தெரியாவிட்டால்….!
ஐயமே இல்லை….!நீ
யசோதை அல்ல….!கிரேசி மோகன்….!

”எந்தக் குழந்தையும் மண்ணின் குழந்தைதான்….!
மண்ணைத் தின்கையிலே…..!
அவன் -கண்ணனாய் ஆவதும், கம்ஸனாய் ஆவதும்….!
அன்னை தன்கையிலே….!’’கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *