கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’என்றுமே நலமான தாயும் சேயும்’’….லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
————————————————————————————————————————————-
–
மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….
‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….
“கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன் –
நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன் –
தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
ஆசுகவி ஆக்குகண் ணா(ஆ)”….கிரேசி மோகன் ….!தேசு -தேஜஸ் ….!
