திருமதி ராதா விஸ்வநாதன்

 

அம்மா சொன்னது

டிபன் டப்பா பத்திரம்

அப்பா சொன்னது

ஸ்கூல் பீஸ் பத்திரம்

தோழி சொன்னது

உன் மனது பத்திரம்

எதையும் இழந்து விடாதே

என்றனர் உற்றோரும் உறவினரும்

இறுக பற்றினேன் அனைத்தையும்

இதனால் இழந்தேன்

இறைவனை

தொலைத்தவனைக் காண

யாவையும் தொலைக்க….

அவனே என்னிடம் 

சிக்குவானோ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *